“ஜனவரி 26 ஆம் தேதி 2019, ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் ,BS SMART கல்வி மையம் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – புதுச்சேரி இணைந்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் 10 துறையின் சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கபட்டனர் (பொது மருத்துவம்,இரத்த அழுத்தம் கண்டறிதல்,சர்க்கரை நோய்யை கண்டறிதல்,காது,மூக்கு,தொண்டை மருத்துவம் ,தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,இசிஜி பார்த்தால், மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம் ) 150க்கும் மேற்பட்ட நோய்யாளிகள் பயன்பெற்றனர்,மேலும் நோய்க்கான மருத்தும் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்குக்கான பேருந்து வசதி,மருத்துவ மற்றும் மருந்து வசதி ஆகியவற்றை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர்கள் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கி வைத்தார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்கள்.”