“08.03.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் இரத்த அழுத்தம் கண்டறிதல்,சர்க்கரை நோயை கண்டறிதல்,இரத்த பரிசோதனை ஆகியவற்றை பார்க்கப்பட்டது சுமார் ரூபாய் 5000 மதிப்புள்ள சோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது . மேலும் டாக்டர்.எழில் அவர்கள் – தலைமை மருத்துவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் டாக்டர்.பானுமதி அவர்கள் – DGO,விருத்தாசலம் அரசு மருத்துவமனை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர் மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த விழாவில் தனது பங்கை வழங்கினார், மேலும் திட்ட மேலாளர் சரவணகுமார் மற்றும் , மணிபாலன், அருண்குமார், ஹஜ்ஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்”