“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் ,BS SMART கல்வி மையம் மற்றும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி இணைந்து 14.02.2023 அன்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது., இந்த முகாமில் 9 துறையின் சிறப்பு (பொது மருத்துவம்,இரத்த அழுத்தம் கண்டறிதல்,சர்க்கரை நோய்யை கண்டறிதல்,காது,மூக்கு,தொண்டை மருத்துவம் ,தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,இசிஜி பார்த்தால், மக்களிற்கான மருத்துவம்.) மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட நோய்யாளிகள் பயன்பெற்றனர்,மேலும் நோய்க்கான மருத்தும் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்குக்கான பேருந்து வசதி,மருத்துவ மற்றும் மருந்து வசதி ஆகியவற்றை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் – வழக்கறிஞர் இருவருமே தலைமை தங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர். செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார், மேலும் திட்ட மேலாளர் S.சரவணகுமார் மற்றும் , மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்”